Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி: நேற்று இரவு தூத்துக்குடி திமுக பாராளுமன்ற வேட்பாளர் கனிமொழி அவர்களது வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை தற்போது முடிவடைந்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியிடன் ஓய்ந்தது. இந்நிலையில் தூத்துக்குடி தொகுதின் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் கனிமொழி வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை தற்போது நிறைவு பெற்றதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.